போபால், ஜூன் 27- ஒன்றிய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் தீவிர ஆதரவாளர் ராகேஷ் குமார் குப்தா காங்கிரஸில் சேர்ந்து பாஜகவிற்கு கடும் அதிர்ச்சி யை ஏற்படுத்தியுள்ளார். மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடப்பாண்டு இறுதியில் தேர்தல் நடை பெறவுள்ள நிலையில், 2 வாரத்திற்கு முன்பு காங்கிரஸ் பொதுச் செய லாளர் பிரியங்கா காந்தி தேர்தல் பிரச்சாரத்தை துவங்கியுள்ள நிலை யில், பிரதமர் மோடி “வந்தே பாரத்” ரயில் துவக்க விழா மூலம் வழக்கமாக விளம்பர தேர்தல் பிரச்சாரத்தை துவங்கியுள்ளார். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக ஆளும் பாஜக விலிருந்து பல முக்கிய தலை வர்கள் காங்கிரஸுக்கு தாவுவது வாடிக்கையான விசயமாக மாறிவிட்டது. மூத்த பாஜக தலைவர் வி.டி. சர்மா, முன்னாள் பாஜக எம்எல்ஏ துருவ் பிரதாப் சிங், முன்னாள் அமைச்சர் தீபக் ஜோஷி, மூத்த தலை வர் யாதவேந்திர சிங் யாதவ் மற்றும் ஒன்றிய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தி யாவின் தீவிர ஆதரவாளர் வைஜ்நாத் சிங் 700 கார்கள் அணிவகுக்க காங்கிரஸில் இணைந்தார். இந்த அதிர்ச்சியில் இருந்து பாஜக மீள்வதற்குள் ஒன்றிய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா வின் தீவிர ஆதரவாளரும், சிவபுரி மாவட்ட பாஜக துணைத் தலைவரு மான ராகேஷ் குமார் குப்தா நூற்றுக் கணக்கான கார்களின் அணிவகுப்புடன் 2000-க்கும் அதிகமான பாஜக தொண்டர்களுடன் காங்கிரஸில் இணைந்து பாஜகவிற்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி அளித்துள்ளார். மத்தியப் பிரதேச தலைநகர் போபால் நகரில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இணைப்புக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் கமல்நாத் முன்னிலையில், காங்கிரஸ் தொண்டர்கள் முன் கைகளைக் கட்டிக்கொண்டு மன்னிப்புக் கேட்டப்படி ராகேஷ் குமார் குப்தா காங்கிரஸ் கட்சியில் இணைத்தார்.
பாஜகவின் கணக்கு கருகியது
ராகேஷ் குமார் குப்தா சிவபுரி மாவட்ட பாஜக துணைத் தலைவர் என்ற சிறிய பொறுப்பில் இருந்தாலும், சிவபுரி வணிக சமுதாயத்தின் முக்கிய தலைவராக உள்ளார். இதனால் ராகேஷ் குமார் குப்தா மூலம் சிவபுரி வணிக சமுதாய வாக்குகளை நடப்பு சட்டமன்ற தேர்தலில் பெற பாஜக கணக்கு போட்டது. ஆனால் ராகேஷ் குமார் குப்தா காங்கிரஸுக்கு திரும்பியதால் சிவபுரி வணிக சமு தாய வாக்குகள் நேரடியாக காங்கிரஸ் பக்கம் சாயவுள்ள நிலையில், ராஜேஷ் குமார் குப்தா மூலம் போடப்பட்ட பாஜகவின் கணக்கு கருகியது.
தனி மரமாகிறார் ஜோதிராதித்ய சிந்தியா
கடந்த 2020இல் முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட அப்போதைய காங்கிரஸ் எம்எல்ஏவான ஜோதி ராதித்ய சிந்தியா தனது ஆதரவாளர் களுடன் பாஜகவில் இணைந்து கமல்நாத் தலைமயிலான காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்தார். பாஜகவில் இணைந்த பொழுது பக்க பலமாக இருந்த ஆதரவாளர்கள் தற்பொழுது ஒவ்வொருவராக மீண்டும்காங்கிரஸ் கட்சியில் இணைந்து வரும் நிலையில், ஜோதிராதித்ய சிந்தியா தனி மரமாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.